M.SivaRajan
M.SivaRajan

@MSivaRajan7

7 Tweets 6 reads Jul 16, 2023
*#அமாவாசை* ⚫
இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார்.
அன்றைய தினமே *#ஆடி* மாதம் பிறக்கிறது.
அன்றைய தினம் *அமாவாசை* யும் சேர்ந்து வருகிறது.
*மாதப்பிறப்பு, தக்ஷிணாயனம், அமாவாசை* என்று மூன்று புண்ணிய காலங்கள் இணைந்த ஆடிப் பண்டிகையை இந்தாண்டு கண்டு களிக்க உள்ளோம்.
மேலும், ஆடி மாதம் 31ம் தேதி (ஆகஸ்ட் 16ம் தேதி) மீண்டும் அமாவாசை வருகிறது.
இப்படி ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வருகிற போது, ஆடி அமாவாசை எனும் சிறப்பு எதற்கு உண்டு ?
எல்லோருக்கும் ஏற்படும் ஐயம் தானே? அது ஏன்?
நாம் நம் முன்னோர்களை வணங்கி வழிபடுவதால் நமக்கு அத்தகைய கேள்வி எழுகிறது.
ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ, பௌர்ணமியோ, வந்தால் முதலில் வருவதை விட்டு விட்டு,
பின்னதையே சிறப்புடையதாக ஏற்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
*எது ஆடி அமாவாசை ?*
" *பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய* " என்பது வாக்கியம்.
இதன் படி, *பூர்வம்* என்கிற முதலாவதை (" *த்யக்த்வா* ") விட்டு விட்டு ,
*பரம்* என்கிற பின்னால் வருவதை ( " *க்ராஹ்ய* ") எடுத்துக் கொள்ள வேண்டும், என்பது தான் அதன் பொருள்.
எனவே, ஆடி முதல் தேதியில் வரும் அமாவாசையை சாதாரணமாக தர்ப்பணம் செய்யும் நாளாகவும்,
ஆடி 31ம் தேதி வரும் அமாவாசையை சிறப்புடைய ஆடி அமாவாசையாகக் கொண்டு,
சமுத்ரம், ஆறு, குளக்கரைகளில் தர்ப்பணம், தானம் முதலியன செய்து பித்ருக்களின் ஆசியைப் பெறுவோமாக !
#அமாவாசை
#ஆடி_அமாவாசை
#ஆடி_அமாவாசை_விளக்கம்
#ஆடி_மாத_பிறப்பு
#தட்சிணாயணம்
#தட்சிணாயணம்_புண்ணிய_காலம்
#தர்ப்பண_புண்ணிய_காலம்

Loading suggestions...